மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் மீட்பு நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு நேற்றுமுன் தினம் (22.09.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக கடற்தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று சடலத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.